மணிசங்கருக்கு எதிராக மயிலாடுதுறையில் போராட்டம்
சென்னை:
தடை செய்யப்பட்ட அமெரிக்க நிறுவனமான யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை, மத்திய அரசுக்குச்சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பயன்படுத்துவதை தடுக்காத மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யரைஎதிர்த்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் மற்றும் சென்னையை நோக்கி பேரணி நடத்த போபால் நீதி கேட்கும் சர்வதேசஅமைப்பு முடிவு செய்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்தது.
இந் நிலையில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒன்றின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பானிப்பட்டுபகுதியில், புதிய நிறுவனம் ஒன்றை அமைக்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உடன்பாடு செய்துள்ளது.
இது மத்திய அரசின் தடையை மீறும் செயலாகும். இந்த உடன்பாட்டை தடுக்க மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர் தவறிவிட்டார். இதைக் கண்டித்து, மயிலாடுதுறையில், நாளை மறுநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும்மயிலாடுதுறையிலிருந்து சென்னை வரை பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications