விடுதலைப் புலிகளுக்கு சுனாமி நிதி கிடையாது: கிளிண்டன்
சென்னை:
விடுதலைப்புலிகளுக்கென தனியாக சுனாமி நிவாரண நிதி வழங்கப்படமாட்டாது என்று சுனாமி மறுசீரமைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதியான பில் கிளிண்டன் கூறியுள்ளார்.
நாகப்பட்டனத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்ராதாகிருஷ்ணனுடன் ஆலோசனைநடத்திய பின்னர் சென்னை வந்த கிளிண்டன் விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னான் கேட்டுக் கொண்டதற்கிணங்கசுனாமி பாதித்த நாடுகளில்சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன்.
அங்கு நடைபெறும் மறு சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிடுவது மட்டுமே எனது வேலை. விடுதலைப் புலிகள்இயக்கத்தினரிடம், சுனாமி நிவாரண நிதி என்று தனியாக தரும் திட்டம் எதுவும் இல்லை.
இலங்கையில் உள்ள அனைவரையும், ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி என்ற முறையில் ஒரேகண்ணோட்டத்துடன் நான் பார்க்க முடியும் என்றார் கிளிண்டன். பின்னர் அவர் இலங்கை புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக நாகையில் செய்தியாளர்களிடம் கிளிண்டன் பேசுகையில், மாவட்ட நிர்வாகம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின்கூட்டு முயற்சியால் நிவாரணப் பணிகள், மறு சீரமைப்புப் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள தற்காலிகக்குடியிருப்புகளுக்குப் பதிலாக நிரந்தரக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுக்க உதவுவேன்.
மகளிர் சுய உதவிக் குழுவினர் மிகவம் திறமையாக செயல்படுகிறார்கள். அவர்கள் செய்துள்ள பொருட்கள் அற்புதமாக உள்ளன.பாதிப்பு கடுமையாகத்தான் உள்ளது. குழந்தைகள் படித்து முன்னேற அதிக முக்கியத்துவம் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.
இந்த மாவட்டத்தின் யங் மேன் (ஆட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன்) மிகவும் திறமையாக செயல்பட்டுள்ளார். மனித நேயத்துடன்செயல்பட்டுள்ளார். அவரைப் பாராட்டுகிறேன். நாகைக்கு மீண்டும் வருவேன் என்றார் கிளிண்டன்.