எங்கள் கூட்டணி எஃகு கூட்டணி: ராமதாஸ்
கோவை:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி எஃகு கூட்டணி என்பதை, எங்களது இடைத் தேர்தல் தோல்வி குறித்துஎள்ளி நகையாடுபவர்கள் விரைவில் உணர்வர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தல் முடிவுகளுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை. பொதுத் தேர்தல் தான் நமக்கு முக்கியம். அந்தத்தேர்தலில் புதிய யுக்தியை கடைப்பிடிப்போம் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அந்த யுக்தியை அவர் அறிவிப்பார் என்றார்ராமதாஸ்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்காரணமாக நாடு தற்போதுஅமைதியாக உள்ளது. ஜாதி, மதச் சண்டைகளுக்கு முற்றுப்புள்ளளி வைக்கப்பட்டு விட்டது. உலக அரங்கில் இந்தியா வல்லரசாகஉருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
மத்திய அரசு ஓராண்டு சாதனை ஆட்சியை நிறைவு செய்து இரண்டாவது ஆண்டில் அடியெடுக்கும் நல்ல நாளில் இந்த மாநாடுநடப்பது மிகவும் பொருத்தமானது என்றார் வாசன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன் உள்ளிட்ட தோழமைக் கட்சித்தலைவர்களும் கூட்டத்தில் பேசினர்.