சென்னையில் பொதுமக்கள் சாலை மறியல், வன்முறை, பஸ்கள் சேதம்!
சென்னை:
சென்னை பெருங்குடி, துரைப்பாக்கம், கண்ணகி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அடிப்படை வசதிகள் கோரிதலைமைச் செயலகம் நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றபோது அவர்களை போலஸீார் தடியடி நடத்திக் கலைத்தனர். இதனால்ஏற்பட்ட வன்முறையில் 5 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டன.
சில மாதங்களுக்கு முன்பு கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர், சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
இப்போராட்டத்திற்குப் பின்னர் கண்ணகி நகர் பகுதிக்கு நிறைய அரசுப் பேருந்துகள் விடப்பட்டன. இந்தந நிலையில்பெருங்குடி,துரைப்பாக்கம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அடிப்படை வசதி கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் ஊர்வலமாக சென்றுமனு கொடுக்க முடிவு செய்தனர். கண்ணகி நகர் வாசிகளும் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.
இன்று காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அடையாறிலிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். அப்போது போலீஸார்அவர்களைத் தடுத்து நிறுத்தினர். அடையாறு பஸ் டிப்போ அருகே அவர்களைத் தடுத்து நிறுத்தி கலைந்து போகுமாறு கூறினர்.ஆனால் பொதுமக்கள் தடையை மீறி செல்ல முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இதையடுத்து அங்கு பெரும் வன்முறை மூண்டது. பொதுமக்களில் சிலர் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.இதில் 5 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. மோதலில் 10 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சட்டத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில்ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் அவரை முற்றுகையிட்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் செய்துதராதவரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என ஜெயக்குமார் கூறியதால் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டுபொதுமக்கள் கலைந்து சென்றனர்.