பால ஊழல் வழக்கு: கருணாநிதிக்கு விரைவில் சம்மன்?
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 38 பேர் மீதான குற்றப்பத்திரிக்கைசரிபார்க்கும் பணி முடிவடைந்தது. விரைவில் அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்குவதற்கான சம்மன் பிறப்பிக்கப்படும்என தெரிகிறது.
இதைத் தொடர்ந்து கருணாநிதி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்படலாம் என பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் யாரும்கைதாகவில்லை. இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை சரி பார்க்கும் பணி முடிவடைந்துள்ளது.
இந்த வழக்கில் 38 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 235 பேர் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்குற்றவாளியாக மு.க.ஸ்டாலினும், இரண்டாவது குற்றவாளியாக கருணாநிதியும் சேர்க்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையைநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை நகலைப் பெறுவதற்கு வருமாறு 38பேருக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications