For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகத்தை நிர்பந்திக்க ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்குத் திறந்து விடுவதற்காக காவிரியிலிருந்து கர்நாடகம்தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாநில அரசும், மத்திய அரசும் நிர்பந்திக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கோரியுள்ளார்.

ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால்மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. இதனால் குறுவைப் பயிரை சாகுபடி செய்ய முடியாத நிலையில் விவசாயிகள்உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை மற்றும் சம்பா ஆகிய இரு சாகுபடிகளையும் சரிவர செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும். இதற்கு மாநிலஅரசுதான் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசும் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X