கர்நாடகத்தை நிர்பந்திக்க ராமதாஸ் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளுக்குத் திறந்து விடுவதற்காக காவிரியிலிருந்து கர்நாடகம்தண்ணீர் திறந்து விட வேண்டும் என மாநில அரசும், மத்திய அரசும் நிர்பந்திக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்கோரியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே குறுவை மற்றும் சம்பா ஆகிய இரு சாகுபடிகளையும் சரிவர செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும்துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். விவசாயிகளின் நலனைக் காக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க வேண்டும். இதற்கு மாநிலஅரசுதான் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும். மத்திய அரசும் கர்நாடகத்தை நிர்பந்திக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.












Click it and Unblock the Notifications