மீன் பிடி தடை நீங்கியது; மகிழ்ச்சியில் மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் மீன் பிடி தடை நீங்கியதைத் தெடார்ந்து ராமேஸ்வரம், நாகப்பட்டனம் உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர்.

ஆண்டுதோறும், மீன்களின் இனப் பெருக்க காலத்தையொட்டி 45 நாட்களுக்கு கடலில் சென்று மீன் பிடிக்க தமிழக அரசு தடைவிதிக்கும். இந்த ஆண்டும் மீன் பிடி தடை அமலில் இருந்து வந்தது. இத்தடை 45 நாட்களுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமையுடன்முடிவடைந்தது.

இதையடுத்து ராமேஸ்வரம், பாம்பன், நாகப்பட்டனம், கோட்டைப்பட்டனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்தமீனவர்களும் உற்சாகத்துடன் மீண்டும் மீன் பிடி தொழிலில் இறங்கியுள்ளனர்.

திங்கள்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் மீனவர்கள் 745 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். தடைக்காலத்தில் மீன்கள் அதிகஅளவில் பெருக்கமடைந்திருக்கும் என்பதால் நிறைய மீன்கள் கிடைக்கும். எனவே உற்சாகத்துடன் மீனவர்கள் கடலுக்குள்சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+