தமிழகத்தில் விடுதலைப் புலிகள் இல்லை: பாட்டீல்
பாண்டிச்சேரி:
தமிழகத்தில் தமிழக அரசோ அல்லது வேறு எந்த அரசியல் கட்சியுமோ, விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை என்று மத்தியஉள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கூறியுள்ளார்.
ஆங்காங்கே சிலர் மறைந்திருந்திருக்கலாம். அதை வைத்துக் கொண்டு விடுதலைப் புலிகள் இங்கிருந்து செயல்படுகிறார்கள் எனகூற முடியாது. விடுதலைப் புலிகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. விடுதலைப் புலிகள் யாரும் இங்குஇல்லை.
தமிழகத் தலைவர்கள் யாரும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை. அப்படியும் சிலர் மறைந்திருந்து செயல்பட்டால், நாம்அதை எதிர்கொண்டாகத்தான் வேண்டும்.
ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஆனால், தென்மாநிலங்களில் நக்சலைட்டுகளின் எண்ணிக்கை பெரிய அளவில் குறையவில்லை. இதுகுறித்து மிக முக்கியமாக இந்த மாநாட்டில்விவாதிக்கப்பட்டது.
நக்சலைட்டுகளின் பெருக்கம் குறையாமல் இருப்பது கவலை தரும் அம்சமாகும். நக்சலைட்டுகளை ஒழிக்க தென் மாநிலங்களின்ஒருங்கிணைந்த செயல்பாடு மிகவும் அவசியமானதாகும் என்றார் பாட்டீல்.












Click it and Unblock the Notifications