ஜாமீன் கிடைத்தது: விடுதலை ஆகிறார் ரகு!
சென்னை:
ஆடிடர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுதலை ஆகிறார்.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரகு, குண்டர் சட்டத்தின் கீழ் பின்னர் கைது செய்யப்பட்டார். ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார்.
இதில் சங்கரராமன் கொலை வழக்கில் சில நாட்களுக்கு முன்பு ரகுவுக்கு ஜாமீன் கிடைத்தது. இன்று ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதிலும் ஜாமீன் கிடைத்தால் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு ரகுவுக்கு இருந்தது.
இந்த நிலையில், சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம்,ரகுவை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது. நீதிபதி ரோசையா இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில், ரூ. 10,000க்கான இரு நபர் உத்தரவாத ஜாமீனுக்கு, அவரை விடுதலை செய்யலாம் என சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்தது.
மேலும் விடுதலைக்குப் பின்னர் ரகு கோவையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் நீதிபதி நிபந்தனை விதித்தார். சங்கரராமன் கொலை வழக்கிலும் இதே நிபந்தனை ரகுவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தடிசம்பர் மாதம் ரகு கைது செய்யப்பட்டார். 7 மாத சிறைவாசத்திற்குப் பிறகு அவர் விடுதலையாகிறார்.
ஆடிட்டர் வழக்கு: ரகுவுக்கு ஜாமீன் கிடைக்குமா?