செப். 14ல் அரசியல் கட்சி உதயம்: விஜயகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் நடைபெறும் ரசிகர் மன்ற மாநாட்டின்போது புதிய கட்சி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்என்று நடிகர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக அரசியலில் குதிக்கப் போவதாக கூறியிருந்த விஜயகாந்த், திடீரென புதன்கிழமை தனது அரசியல் பிரவேசம்குறித்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த்துக்குச்சொந்தமான ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் ரசிகர்களும், செய்தியாளர்களும் திரண்டனர்.

காலையில் விஜயகாந்த் பேட்டி அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அறிவிக்கவில்லை. மாலையில்தான் அவர்பேட்டி அளித்தார். விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் மாநாடு நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.மதுரை அரசியல் வாதிகளுக்கு ராசியான இடம். அங்கு நடந்த அனைத்து மாநாடுகளும் வெற்றிஅடைந்துள்ளன. எனவேதான் மதுரையை தேர்வு செய்துள்ளேன்.

மதுரை திருநகர் பகுதியில் 70 ஏக்கர் இடத்தைப் பார்த்து வைத்துள்ளோம். அங்கு மாநாடு நடத்த அரசிடம் அனுமதிகோரியுள்ளோம். அனுமதி கிடைக்காத பட்சத்தில் தமுக்கம் மைதானத் திடலில் மாநாடு நடக்கும் அல்லது ரேஸ்கோர்ஸ் திடலில்நடைபெறும்.

ரசிகர் மன்ற மாநாடாகஇது நடந்தாலும், எனது புதிய அரசியல் கட்சியின் மாநாடாகவும் இது அமையும். புதிய கட்சி குறித்துஅப்போது முறைப்படி அறிவிக்கவுள்ளேன். கட்சிக்குத் தேவையான அனைத்து அணிகளும் அமைக்கப்பட்டு விட்டன. இனிஒவ்வொரு அணிக்கும் தலைவர்கள் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.

எல்லோராலும் முடியாதது என்னால்தான் முடியும் என்றால் அது நிச்சயம் முடியும். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பதுதானாக நடக்கிறது.எனது ரசிகர்களை பல வகைகளில் சோதித்துப் பார்த்துத்தான் அரசியலுக்கு வருவது என்ற முடிவுக்கு நான்வந்தேன்.

மாநாட்டில் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது எனக்குத் தெரியாது. மாநாட்டு மேடையில் என்னோடுயார் அமர்ந்திருப்பார்கள் என்பது கூட எனக்குத் தெரியாது.

பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. 100இடங்களிலும் போட்டியிடலாம், 5 இடங்களிலும் போட்டியிடலாம், ஏன் அனைத்துத் தொகுதிகளிலும் கூட போட்டியிடலாம்.

டிசம்பரில் தேர்தல் வந்தாலும், அல்லது எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க நாங்கள் தயார். மலையோடு மோதநான்தயாராகி விட்டேன்.

சென்னையில் தொண்டர் அணிக்குப் பயிற்சி கொடுக்கவுள்ளோம். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும், ஒன்றியத்திற்குதலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் விஜயகாந்த்.

நேற்றே விஜயகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்ற பலத்த எதிர்பார்ப்புக்கு மாறாக, செப்டம்பரில் தனது கட்சிகுறித்து அறிவிக்கப் போவதாக விஜயகாந்த் கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு லேசான ஏமாற்றத்தைக் கொடுத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+