For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுராந்தகம் ஆறுமுகம் மாரடைப்பால் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முன்னாள் திமுக எம்.எல்.ஏவும், சமீபத்தில் அதிமுகவில் இணைந்தவருமான மதுராந்தகம் ஆறுமுகம் மாரடைப்பால் இறந்தார்.

செங்கல்பட்டைச் சேர்ந்த ஆறுமுகம் இரண்டு முறை திமுக சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இதுதவிர திமுக மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர், பின்னர்மதிமுகவுக்கு சென்றார். அதன் பின்னர் மீண்டும் திமுகவில் சேர்ந்து சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராக இருந்தார். சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துஅவரது முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இந்த நிலையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால்வியாழக்கிழமை நள்ளிரவு வாக்கில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

77 வயதாகும் மதுராந்தகம் ஆறுமுகத்திதன் உடல் செங்கல்பட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் அடக்கம் செய்யப்படுகிறது. ஆறுமுகத்திற்கு மனைவி,மகள், 2 மகன்கள் உள்ளனர். மதுராந்தகம் ஆறுமுகம் மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X