நடுக் கடலில் கப்பலில் தீ: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹால்தியா:

கொல்கத்தா அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் உடல் கருகி இறந்தனர்.

மியான்மர் தலைநகர் யாங்கூனிலிருந்து பருப்பு மூட்டைகளுடன் இந்திய சரக்கு கப்பல் ஒன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தது. கொல்கத்தா அருகே வந்த இந்தகப்பலை கடந்த 30ம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து கடலோர கப்பல் படையினர் மாயமான சரக்கு கப்பலை தேடினார்கள்.

அப்போது ஹால்தியா துறைமுகத்தில் இருந்து 150 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் அந்த சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் படையினர் விரைந்து சென்று கப்பலில் தவித்துக் கொண்டிருந்த 10 ஊழியர்களை மீட்டனர்.

ஆனால் மீட்புப் படையினர் செல்வதற்குள் கப்பலின் கேப்டன் ஷெல்லே, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இவர்களது உடல்களைகடலோர கப்பல் படையினர் மீட்டனர். மேலும் ஒருவரை காணவில்லை. அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+