ராகிங் கொலை: 3 மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை
திருச்சி:
திருச்சியில் ராகிங் காரணமாக மாணவரைப் படுகொலை செய்த வழக்கில், 3 மாணவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல்தண்டனையும், 3 மாணவர்களுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து திருச்சி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருச்சி பெரியார் கலைக் கல்லூரியில் படித்து வந்தவர் அழகர்சாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதேகல்லூரியில் படிக்கும் அழகர்சாமியின் உறவினர் ரமேஷை, கடந்த 2002ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி அதே கல்லூரியில்படிக்கும் சில மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
இவர்கள் மீது திருச்சி விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இவர்களில் இப்ராகிம் மற்றும் ரஞ்சித்குமார் இருவரும் 18வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதால் தனியாக வழக்கு நடத்தப்படுகிறது.
மற்ற 6 பேர் மீதும் நடந்த வந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், சுரேஷ், ஆறுமுகம், பிரதீப் ஆகிய 3பேருக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல், 1000 ரூபாய் அபராதம் விதித்தும், மற்ற மூன்று பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல்,1000 ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி இளங்கோ உத்தரவிட்டார்.