வாக்காளர் பட்டியல்: பெயர் சேர்க்க 17 லட்சம் பேர் மனு
சென்னை::
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கக் கோரி தமிழ்நாட்டில் கடந்த 3 வாரங்களில் 17 லட்சம் பேர் விண்ணப்பம்அளித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.
இந்த 3 வாரங்களில் இதுவரை 17 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் அளிக்கப்பட்டுள்ளவிவரங்களை சரிபார்க்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இந்த சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இப்பணியை ஆய்வு செய்ய சென்னையிலிருந்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் 2 அதிகாரிகள் சென்றுள்ளனர்.
கடந்த புதன்கிழமை தொடங்கிய இந்தப் பணி, வெள்ளிக்கிழமையுடன் (இன்று) முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே முடிவடைந்த முதற்கட்ட ஆய்வுப்பணியின் அறிக்கையை மத்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி விட்டோம்.ஆய்வுப் பணிகள் முழுமையாக முடிவடைந்ததும் இறுதி அறிக்கையும் அனுப்பப்பட்டுவிடும்.
அந்த அறிக்கை பரிசீலிக்கப்பட்ட பிறகு மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வந்து இப்பணிகளை மறு ஆய்வுசெய்வார்கள் என்றார் நரேஷ் குப்தா.












Click it and Unblock the Notifications