கோவாவில் ஆட்சியமைக்கிறது காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பனாஜி:

குடியரசுத் தலைவர் ஆட்சி அமுலில் உள்ள கோவாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது.

கோவா மாநிலத்தில் சமீபத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது. இந் நிலையில் அந்த மாநிலத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்குஇடைத்தேர்தல் நடைபெற்றது.

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 39தொகுதிகளில் 21 இடங்களுடன் (காங்கிரஸ்- 18, தேசியவாத காங்கிரஸ் 2, எம்.ஜி.பி - 1) பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளது.

இதனையடுத்து முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் நடக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் பிரதாப் சிங் ரானே தேர்ந்தெடுக்கபடுவார் என தெரிகிறது.

அரியானா மாநிலம் ரோக்டாகில் உள்ள கிலோய் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா 1,03635 ஓட்டுகள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றார்.

கேரளாவில் 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. ஆந்திராவில் 1 தொகுதியில் தெலுங்கு தேசம் வெற்றி பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+