சென்னையில் இன்று நர்சரி பள்ளி தாளாளர்கள் கூட்டம்
சென்னை:
நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளின் தாளாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்என்று தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மற்றும் மேல்நிலை பள்ளிகளின் நிர்வாகிகள் சங்க பொதுச் செயலாளர் கிறிஸ்துதாஸ் கூறினார்.
கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தீ தடுப்பு நடவடிக்கை மற்றும் அடிப்படை வசதிகள் செய்யாத நர்சரி பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2000 நர்சரி பள்ளிகள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
இது தொடர்பாக தொடக்க கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்துகலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். உதவி தொடக்க கல்வி அலுவலகத்திற்கும் இதுகுறித்து தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க முடியவில்லை என்று அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர் புகார் கூறினால்,உடனே அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு கூறும் நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் தரும்படி அங்கீகாரம் பெறாத சில பள்ளிகள் விண்ணப்பித்துள்ளன. அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தபள்ளிகளுக்கு சென்று, விதிமுறைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலனை காக்கவும், பள்ளியில் சேர்ப்பதற்கும் முழு முன்னுரிமை அளிக்கப்படும். அங்கீகாரம் பெறாமல் பள்ளிகள் இயங்கினால் அதுகுறித்து தொடக்ககல்வித்துறைக்கு பொதுமக்கள் புகார் கூறலாம். இவ்வாறு தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
தமிழக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன், மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலர் கிறிஸ்துதாஸ் கூறுகையில், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைவலுக்கட்டாயமாக மூடச் சொல்வது தவறானது. அவ்வாறு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தனித்தனியாக கோர்ட்டில் முறையிடலாம் என்று கூடுதல் அட்வகேட்ஜெனரல் கூறியுள்ளார்.
குறைந்த அளவு மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் பள்ளிகள் இல்லாத நிலை உள்ளது. அதுபோன்ற இடங்களில் செயல்படும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளைமூட வேண்டும் என்று கூறுவதால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர்.
5ம் தேதி (இன்று) அனைத்து நர்சரி பள்ளிகளின் தாளாளர்கள் கூட்டம் சென்னை தியாகராய நகரில் பிரகாச சாலை பாலமந்திர் ஹாலில் நடக்கிறது. இதில் ஆயிரத்து500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என்று நம்புகிறோம். இந்த கூட்டத்தில் அடுத்தகட்ட அணுகுமுறை குறித்து முடிவு எடுக்கப்படும்என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications