மண்டபத்தில் சேது சமுத்திரத் திட்ட அலுவலகம் - டி.ஆர்.பாலு
ராமேஸ்வரம்:
சேது சமுத்திரத் திட்ட அலுவலகம், மண்டபம் பகுதியில் அமைக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இன்று ஆய்வு மேற்கொண்ட டி.ஆர்.பாலு பின்னர் செய்தியாளர்களிடம்பேசுகையில், சேது சமுத்திரத் திட்டத்தையொட்டி ராமநாதபுரம், மண்டபத்தில் 2 ஹெலிபேடுகள் அமைக்கப்படும்.
சேது சமுத்திரத் திட்ட அடிக்கல் நாட்டு விழாவுக்கு 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பாக திட்ட அலுவலகத்திற்கு அடிக்கல்நாட்டப்படும்.
சேது சமுத்திரத் திட்டத்தினால் இப்பகுதிகளைச் சேர்ந்த 7000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் மதுரை முதல்தனுஷ்கோடி வரையிலான 186 கிலோமீட்டர் சாலையை 4 வழிப் பாதையாக மாற்ற ரூ. 900 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.3 ஆண்டுகளில் இந்தப் பணி முடிவடையும்.
ராமேஸ்வரத்தில் பல்நோக்கு துறைமுகம் அமைக்கப்படும். சுவிஸ் கால்வாயை அமைத்த மூத்த அதிகாரிகளுடன், மத்திய அரசுபுரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம், சேது சமுத்திரத் திட்ட அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகள் பயிற்சிஅளிப்பார்கள் என்றார் டி.ஆர்.பாலு.