Vijeyandra files preventive bail application
செங்கல்பட்டு:
சங்கர மடத்தின் கணக்குகளை திருத்திய வழக்கில் முன் ஜாமீன் கேட்டு விஜயேந்திரர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெயேந்திரர், காஞ்சி மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் தம்பி ரகு ஆகியோர்ஜாமீன் பெற்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் விஷ்ணு காஞ்சி போலீஸார், விஜயேந்திரரையும் வழக்கில் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கணக்குகளை திருத்திய வழக்கில் தன்னை போலீஸார் கைது செய்யக்கூடும் எனக் கருதி விஜயேந்திரர்,செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கறிஞர்கள் சண்முகம், வரதன், தினகர் ஆகியோர்இந்த மனுவை நேற்று தாக்கல் செய்தனர்.
இந்த மனு வரும் 15ம் தேதி முதன்மை செஷன்ஸ் நீதிபதி அக்பர் அலி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
நேற்று முன் தினம் காஞ்சி மடத்தில் வைத்து இந்த விவகாரம் தொடர்பாகவும் விஜயேந்திரர், ஜெயேந்திரரிடம் போலீசார் கேள்விஎழுப்பியதாகத் தெரிகிறது. இதையடுத்தே முன் ஜாமீன் பெற இளையவர் முடிவு செய்துள்ளார்.
இப்போது இருவருமே காஞ்சியை காலி செய்துவிட்டு மீண்டும் கலவையிலேயே குடியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.