23ம் தேதி சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழா?
சென்னை:
சேது சமுத்திரத் திட்டத் தொடக்க விழா வரும் 23ம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெறும் என தெரிகிறது. இதில்பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து திட்டத் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகளில் மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் டி.ஆர்.பாலுபடு தீவிரமாக இறங்கியுள்ளார்.
ராமேஸ்வரம் சென்று சமீபத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்ட அவர் தொடக்க விழா தொடர்பானஆலோசனைகளில் ஈடுபட்டார். இந் நிலையில் டெல்லியில், இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
அதில் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டனம், எண்ணூ
இந்தக் கூட்டத்தில் பாலு பேசுகையில், தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்குசம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த விழா என்பதால் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் வகையில் சிறப்புரயில்கள் விடுவதற்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டுள்ளன. ரயில்வே அமைச்சருடன் இதுகுறித்து பேசிவருகிறோம்.
சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் சிறப்பு ரயில்கள் விடப்படும். தொடக்க விழாவுக்கு வரும் பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றார் பாலு.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். சோனியா காந்தி ரஷிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டுவருகிற 21ம் தேதி டெல்லி திரும்புகிறார்.