காவிரி நீர் கோரி மதிமுக போராட முடிவு
வேலூர்:
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு வழங்கக் கோரி மக்களைத் திரட்டி மதிமுக போராட்டம் நடத்தப் போவதாகஅக்கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்பாக இன்று வேலூர் கோர்ட்டில் இல.கணேசன், விஜயா தாயன்பன் ஆகியோர் ஆஜராகினர்.
பின்னர் வெளியே வந்த கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி ஒரு ஆண்டு கூட கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டதில்லை. அதேபோல நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பும் வெளியாவதில் நீண்ட தாமதம் நிலவி வருகிறது.
தறபோது மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லை. கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான் இந்த ஆண்டு பாசனத்தை விவசாயிகள் மேற்கொள்ள முடியும்.
எனவே தமிழகதிற்குத் தேவையான நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி தஞ்சை, திருவாரூர், நாகை பகுதி விவசாயிகளைத் திரட்டி மதிமுக போராட்டம் நடத்தும்என்றார்.












Click it and Unblock the Notifications