காலையில் தந்தை கொலை: மாலையில் பழி தீர்த்த மகன்!
மதுரை:
காலையில் மாமனாரைக் கொலை செய்து விட்டு காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மைத்துனரை, கொலை செய்யப்பட்டவரின்மகன், இரவில் மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக குத்திக் கொலை செய்ததால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மோதலில் ஜெயவீரபாண்டியனும் காயமடைந்தார். அவரை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில்ஜெயவீரபாண்டியன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் தனது தந்தையைக் கொன்ற ஜெயவீரபாண்டியனைப் பழி வாங்குவதற்காக, முத்துமணியின் மகன் சமயமுத்து, கத்தியுடன் இரவு மதுரைமருத்துவனைக்கு வந்தார். அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் நுழைந்த அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயவீரபாண்டியனை வெளியே இழுத்து வந்து சரமாரியாககுத்திக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பினார்.
இதைப் பார்த்ததும் அங்கிருந்த நோயாளிகள் பீதியடைந்து அங்கிருந்து ஓடினர். தலைமறைவான சமயமுத்துவைப் பின்னர் போலீஸார் கைது செய்தனர்.
காலையில் தந்தையைக் கொன்றவரை மருத்துவமனைக்குள் புகுந்து மாலையிலேயே மகன் பழி தீர்த்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications