சேது கால்வாய் தோண்டும் பணி: தூர்தர்ஷனின் நேரடி ஒளிபரப்பு ஒத்திகை
சென்னை:
சேது கால்வாய் தோண்டும் பணியை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு முன்னோட்டமாக, சென்னை அருகே கடற்படை உதவியுடன், கடலில் மண் அள்ளுவது போன்றகாட்சியை தூர்தர்ஷன் சோதனை ஒளிபரப்பு செய்து ஒத்திகை பார்த்தது.
இதையடுத்து இதுதொடர்பான ஆய்வுப் பணிகளில் தூர்தர்ஷன் அதிகாரிகள் இறங்கினர். முதலில், மண் அள்ளும் இயந்திரத்திலேயே கேமராவைப் பொருத்த யோசனைதெரிவிக்கப்பட்டது. ஆனால் கடல் சீற்றம் மற்றும் செயற்கைக் கோள் தொடர்பு கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.
இதேபோன்ற இன்னொரு திட்டமும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக கைவிடப்பட்டது.
இதையடுத்து, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து மண் அள்ளும் பணியை பதிவு செய்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை துறைமுகம் அருகே கடற்படை ஹெலிகாப்டர் உதவியுடன், சேது கால்வாய் தோண்டும் பணியைப் போன்ற ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு அதுசோதனை முறையில் படம் பிடிக்கப்பட்டது. இந்த சோதனை ஒளிபரப்பு வெற்றிகரமாக இருந்ததாக தூர்தர்ஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் டி.ஆர்.பாலு, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. ஒத்திகைவெற்றிகரமாக நடந்தததையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை டி.ஆர்.பாலு பாராட்டினார்.












Click it and Unblock the Notifications