இளங்கோவன் தமிழனே அல்ல: பாமக
கும்பகோணம்:
தமிழனே அல்லாத இளங்கோவன் பாமகவின் போராட்டம் குறித்தும், லட்சியம் குறித்தும் கேலி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அக் கட்சியின்எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு எச்சரித்துள்ளார்.
பாமக மற்றும் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டங்களை கடுமையாக சாடியும், சினிமாப் படங்களுக்கு தமிழில்தான் பெயர் வைக்க வேண்டும் என்று கோரிவருவதையும் கிண்டலடித்து மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியுள்ளதற்கு பாமக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந் நிலையில் கும்பகோணத்தில் நடந்த பாமக கூட்டத்தில், அக்கட்சியின் எம்.எல்.ஏ குரு இளங்கோவனை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இளங்கோவனை பைத்தியக்காரன் என்றும் கூறினார்.
குரு பேசுகையில், தமிழில் பேச வேண்டும், தமிழுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எங்கள் மருத்துவர் ஐயா கூறியது தமிழர்களுக்குத்தான். இளங்கோவனுக்குஅல்ல. இளங்கோவன் தமிழனே கிடையாது.
அவரது தாய் மொழி என்னவென்று (தெலுங்கு) எங்களுக்குத் தெரியும். அதை வெளியே சொல்ல நாங்கள் விரும்பவில்லை. அதை பகிரங்கப்படுத்தும் நிலைக்குஇளங்கோவன் எங்களைத் தள்ளி விட்டு விட வேண்டாம்.
பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பேரன் என்பதால் இளங்கோவனை இத்துடன் விடுகிறோம். அவர் தொடர்ந்து இதுபோல பேசி,பெரியாருக்கு அவப் பெயரை தேடித் தரவேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
குருவின் பேச்சு மூலம் பாமகவுக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான மோதல் புதிய விறுவிறுப்பை எட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications