கேரளா வந்த சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது

Subscribe to Oneindia Tamil

கொச்சி:

இந்தோனேஷியாவில் இருந்து கேரளாவுக்கு கொப்பரை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் இலங்கை அருகே கடலில் மூழ்கியது. இதில் இருந்த ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாகஉயிர் தப்பினர்.

இந்தோனேஷியாவில் இருந்து 1700 டன் கொப்பரையுடன் எம்.வி.ஹலாலா என்ற சரக்கு கப்பல் கடந்த 3 வாரங்களுக்கு முன் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டது.இந்தக் கப்பல் மே 26ம் தேதி கொச்சிக்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால் அந்தக் கப்பல் கோளாறு காரணமாக அந்தமான் தீவுப்பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பிறகு கப்பல் குறித்த எந்தத் தகவலும்கிடைக்கவில்லை.

இந் நிலையில், நேற்று அந்தக் கப்பல் இலங்கை அருகே நடுக்கடலில் மூழ்கி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் இலங்கையிலிருந்துமீட்புப் படைக் கப்பல் விரைந்து சென்றது. ஆனால் அதற்குள் அந்தக் கப்பல் முழுவதுமாக மூழ்கி விட்டது.

கப்பலில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக தப்பி விட்டதாக கொச்சி துறைமுகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+