டிவி டவர் தகர்ப்பு: மாறன் உள்பட 3 பேர் விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மயிலாடுதுறை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்திற்கு வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த மாறன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மயிலாடுதுறை அருகே உள்ள உளுந்துக்குப்பை பகுதியில் உள்ள தொலைக்காட்சி ஒளிபரப்புக் கோபுரம் கடந்த 1996ம் ஆண்டுஏப்ரல் 22ம் தேதி குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன், ரேடியோ வெங்கடேசன், உத்திராபதி ஆகியோரை போலீஸார்கைது செய்தனர்.

முதலில் இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் பூந்தமல்லியில் வெடிகுண்டு வழக்குகளைவிசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஆனால், 3 பேர் மீதான குற்றச்சாட்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், மூவரையும் விடுதலை செய்து நீதிபதி தேவதாஸ்உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் விடுதலையானாலும் கூட, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகள் இந்தமூவர் மீதும் இருப்பதால் தொடர்ந்து அவர்கள் சிறையிலேயே இருப்பார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+