டிவி டவர் தகர்ப்பு: மாறன் உள்பட 3 பேர் விடுதலை
சென்னை:
மயிலாடுதுறை தொலைக்காட்சி ஒளிபரப்பு கோபுரத்திற்கு வெடிகுண்டு வைத்ததாகக் கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த மாறன் உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த மாறன், ரேடியோ வெங்கடேசன், உத்திராபதி ஆகியோரை போலீஸார்கைது செய்தனர்.
முதலில் இந்த வழக்கு மயிலாடுதுறை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. பின்னர் பூந்தமல்லியில் வெடிகுண்டு வழக்குகளைவிசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
ஆனால், 3 பேர் மீதான குற்றச்சாட்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாததால், மூவரையும் விடுதலை செய்து நீதிபதி தேவதாஸ்உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விடுதலையானாலும் கூட, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு உள்ளிட்ட மேலும் 2 வழக்குகள் இந்தமூவர் மீதும் இருப்பதால் தொடர்ந்து அவர்கள் சிறையிலேயே இருப்பார்கள்.












Click it and Unblock the Notifications