விஷ வண்டுகள் தாக்கி 5 வயது சிறுவன் பலி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் நூற்றுக்கணக்கான விஷ வண்டுகள் கடித்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். 4 சிறுவர்கள் உயிருக்குஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் மரத்தை வெட்டும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த மரத்தில் கூடு கட்டிக்குடியிருந்த நூற்றுக்கணக்கான விஷ வண்டுகள் கலைந்து கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கின.

இந்த வண்டுகள் அங்கு நின்றிருந்த சிறுவர்கள் சிலரை பயங்கரமாக கடித்தன. இதில் 5 சிறுவர்கள் படுகாயமடைந்து மயங்கிவிழுந்தனர். உடனடியாக அனைவரும் தஞ்சை மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு ஹரிஹரன் என்ற 5 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். மற்ற 4 சிறுவர்களும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+