திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது: ராமதாஸ்
சென்னை:
திமுக கூட்டணியில் யாரும் குழப்பம் ஏற்படுத்த முடியாது. குழப்பம் ஏற்படுத்த நினைப்போரின் செயல்களால் பாமகதொண்டர்கள் ஏமாந்து விடக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கோ.க.மணி, தற்போது சட்டமன்ற பாமக தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமதாஸின் மகன் டாக்டர்அன்புமணி, மாநில அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் பாமக நிறுவனர் ராமதாஸ் கூடியிருந்த தொண்டர்களிடையே பேசுகையில், வருகிற சட்டசபைத் தேர்தலிலும் திமுகதலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் தான் பாமக நீடிக்கும். திமுக தலைமையில் தான் தேர்தலை சந்திக்கும்.
கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்போரின் செயல்களுக்கு தொண்டர்கள் ஏமாந்து விடக் கூடாது.
தமிழகத்தில் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாக ஆக்க வேண்டும். தமிழ் வழியில் பாடங்கள் கற்பிக்கப்படவேண்டும் என்றுதெரிவித்தார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications