சுனாமி நிவாரணம்: புலிகளுடன் ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்து

Subscribe to Oneindia Tamil


சுனாமி நிவாரணப்பணிகளில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்படுவது தொடர்பாக இலங்கைபாராளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசுகையெழுத்திட்டது.

இலங்கையில் சுனாமி பாதித்த பகுதிகளில் இலங்கை அரசுடன் விடுதைலைப் புலிகளும் இணைந்து நிவாரணப்பணிகளில் ஈடுபடுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நார்வே வெளியுறவு துணை அமைச்சர் விடார்ஹெல்ஜெசன் கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கை வந்தார். அவர் முதலில் அதிபர் சந்திரிகாவை சந்தித்துப்பேசினார்.

இதன் பிறகு அவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்செல்வனையும் பிறதலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் சந்திரிகா அளித்த வாக்குறுதிகளையும்,யோசனைகளையும் நார்வே அமைச்சர் விடுதலைப் புலிகள் தலைவர் தமிழ்செல்வனிடம் விளக்கினார்.

ஆனால், நிவாரணப் பணிகளை இணைந்து மேற்கொள்வதில் தெளிவான திட்டம் ஏதும் இலங்கை அரசிடம்இருந்து கிடைக்காததால் பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை.

இதனால் அப்போது இந்த விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று விடுதலைப் புலிகள் தரப்பில்கூறப்பட்டது.

இது குறித்து தமிழ்செல்வன் விடுத்த ஒரு அறிக்கையில், ஒருங்கிணைந்து செயல்படும் ஒப்பந்தத்தில்கையெழுத்திடும்படி அதிபர் சந்திரிகா கூறுகிறார். இப்போதும் அதையே வலியுறுத்துகிறார். அது மட்டும்போதுமானதல்ல என்று குறிப்பிட்டிருந்தார்.

இந் நிலையில் சுனாமி நிவாரண ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது. இது குறித்துஇலங்கை அமைச்சர் மைத்ரிபாலா கூறுகையில், விடுதலைப் புலிகளுடன் இணைந்து னாமி நிவாரணப் பணிகளில்ஈடுபடுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இன்று இலங்கை அரசு கையெழுத்திட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் ரகளை:

இலங்கை அரசின் மறுவாழ்வுத் துறை அமைச்சர் ஜெயசிங்கே இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இதற்கான ஆவணங்களுடன் நார்வே தூதுக்குழுவினர் விடுதலைப் புலிகளை சந்திக்க கிளிநொச்சிசென்றுள்ளனர்.

அவர்கள் இதில் கையெழுத்திட்ட உடன் இந்த ஒப்பந்தம் அமுலுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

இதற்கிடையே விடுதலைப் புலிகளுடனான இந்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையழுத்திட்டதற்கு இலங்கைபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர்களை பேசவிடாமல்ஜேவிபி கட்சி உறுப்பினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனால் பாராளுமன்றத்தில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஜூலை 5ம் தேதி வரை பாராளுமன்றம்ஒத்தி வைக்கப்பட்டது.

புலிகளுடனான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்திட்டது குறித்து அறிந்த ஜேவிபி கட்சித் தொண்டர்கள்பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிவிரட்டியடித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+