அண்ணா பல்கலை.புதிய துணைவேந்தர் விஸ்வநாதன்
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுனர் பர்னாலாநேற்று வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றி வந்த பாலகுருசாமி, கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.இதையடுத்து புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய நீதிபதி நடராஜன் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவினர் துணைவேந்தர் பதவிக்கு, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, வேலூர்தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் துணைவேந்தர் ராதாகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழகபேராசிரியர் விஸ்வநாதன் ஆகிய 3 பேரை தேர்வு செய்து ஆளுனருக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பேராசிரியர் விஸ்வநாதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்து ஆளுனர் பர்னாலா நேற்றுஉத்தரவிட்டார். இதையடுத்து நேற்று புதிய துணைவேந்தராக விஸ்வநாதன் பொறுப்பேற்றார்.












Click it and Unblock the Notifications