ரயில் மறியல்: பாஜக தொண்டர்கள் கைது
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக தலைவர்சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 100 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் இன்று பாஜகவினர் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும்என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இன்று காலைசென்னை சென்டிரல் ரயில் நிலையப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கட்சித் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்தலைமையில் குவிந்தனர்.
ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த அவர்கள் திடீரென ரயில் நிலையத்திற்குள் புகுந்து ஓடினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது. ரயில் மறியல் செய்ய அவர்கள் முயன்ற போது போலீஸார் தடுத்து அனைவரையும் கைது செய்துஅங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேபோல தர்மபுரியில் 50 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறுபகுதிகளிலும் இன்று பாஜகவினர் ரயில் மறியல் செய்ய முயன்று கைதாகினர்.












Click it and Unblock the Notifications