சுனாமி வளர்ச்சிப் பணிகளில் தாமதம்: நாகையில் கடையடைப்பு
நாகப்பட்டினம்:
சுனாமி பாதித்த பகுதிகளில் உடனடியாக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றக் கோரி நாகை மாவட்டத்தில் இன்றுகடையடைப்பு நடத்தப்படுகிறது.
கடந்த டிசம்பர் 26ம் தேதி ஏற்பட்ட சுனாமியின் தாக்குதலில் நாகப்பட்டினம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது.இப்பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனாலும் அவை முழுவீச்சில் நடைபெறவில்லை என்று கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை உடனடியாக நிறைவேற்றக் கோரி இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சார்பில்நாகையில் இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் நாகை நகரில் உள்ள கடைகள், ஹோட்டல்கள்,வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை மூடிக்கிடக்கின்றன.
கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோக்களும் இன்று ஓடவில்லை. இதனால் பள்ளிமாணவ,மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுக்கு ஏற்ப உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடிநீர்தட்டுப்பாட்டை போக்க அணைக்கரை- நாகை குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், பாதாளச்சாக்கடை திட்டத்தைஉடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பன உட்பட 51 கோரிக்கைகளை இந்திய வர்த்தக தொழிற்சங்கம்வலியுறுத்தியுள்ளது.