சேது சமுத்திர விழா: மதுரையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை:
சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மதுரையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை விமானநிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
மதுரையில் ஜூலை 2ம் தேதி நடைபெறும் சேது சமுத்திர திட்டத் தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிகட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
தொடக்க விழா நடைபெறும் பந்தல் அமைப்பு பணி 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பார்வையாளர்கள் அமர நாற்காலிகள்குவிக்கப்பட்டுள்ளன. முக்கியப் பிரமுகர்களின் வாகனங்கள், விழாவுக்கு வரும் கூட்டணிக் கட்சித் தொண்டர்களின்வாகனங்களை நிறுத்தம் செய்யும் இடங்கள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றன.
மேடை மேற்கூரை அமைக்கும் பணி துப்பாக்கி ஏந்திய போலீஸ், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் நடந்து வருகிறது. மேடைக்குஎதிரே அமைக்கப்பட்டுள்ள விழா பந்தலின் முன்பகுதியில் முக்கிய பிரமுகர்கள் அமர இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு மூங்கில்கம்புகளால் தடுப்பு ஏற்படுத்தப்படுகிறது.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா ஆகியோர் மதுரை வருகின்றனர். பிரதமரின் சிறப்புபாதுகாப்பு ஐ.ஜி ராமச்சந்திரன் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை விமானநிலையத்தில் நடந்தது.
மதுரை போலீஸ் கமிஷனர் விஜய்குமார், டி.ஐ.ஜி. ரவி, மதுரை எஸ்.பி., சுந்தரேசன், இன்டலிஜென்ஸ் பீரோ எஸ்.பி. நேரு,மதுரை போலீஸ் துணை கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், திருநெல்வேலி எஸ்.பி., வரதராஜு மற்றும் அதிகாரிகள்இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.