நுழைவுத் தேர்வு: தமிழக அரசு இன்று அப்பீல் மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை செல்லாது என்று அறிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துஉச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் தமிழக அரசு மேல் முறையீடு செய்கிறது.
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறையை தமிழக அரசு ரத்து செய்தது செல்லாது என்றுஉயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என்று டெல்லியில் முதல்வர் ஜெயலலிதாதெரிவித்திருந்தார்.
இதையடுத்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி, வழக்கறிஞர் அய்யம் பெருமாள் ஆகிய இருவரும்டெல்லி சென்று அங்கு உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவுடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications