தமிழகத்திற்கு முன் கூட்டியே தேர்தல்: கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வர வாய்ப்புள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுவை ஆகியமாநிலங்களில் அடுத்த ஆண்டு மார்ச்சில் சட்டசபைத் தேர்தல் நடைபெற வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அதே காலகட்டத்தில், தமிழகத் தேர்தலையும் சேர்த்து நடத்திட தேர்தல் கமிஷன் முடிவெடுக்கும் என்று தெரிகிறது. அதற்கானபணிகளை இப்போதே வகுத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கிட வேண்டும்.
வாக்காளர் பட்டியலை வகைப்படுத்திடும் பணியே இன்னமும் முழுமையாக நிறைவடையாமல் உள்ளது. நமது கூட்டணியின்செயல்வீரர்களும், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கூட்டணிக் கட்சிகளின் அமைப்புகளும், அமைப்புகளின் நிர்வாகிகளும்
எவ்வாறு இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்ற விவரங்களை, அறிந்து கொள்வதற்கு வரும் 18ம் தேதி முதல் 30ம் தேதி வரைசென்னை, அறிவாலயத்தில் மாவட்ட வாரியாக கழக அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படஉள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications