சர்ச்சைக்குரிய வனச்சரகர் ராஜேந்திரன் மீண்டும் கைது
திண்டுக்கல்:
சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய பெரியகுளம் வனச் சரகர் ராஜேந்திரன், கார் கடனைத் திருப்பிக் கேட்ட வங்கி ஊழியர்களைமிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியகுளம் வனச் சரகராக இருந்து வந்தவர் ராஜேந்திரன். பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர்,வனப் பகுதியில் மரங்களை வெட்டுவதாக புகார் கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார் ராஜேந்திரன். பின்னர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும்பணியில் சேர்ந்தார். அதன் பிறகும் கூட அவருக்கு பல்வேறு சிக்கல்கள் கொடுக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந் நிலையில் திண்டுக்கல்லில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை மிரட்டியதாக ராஜேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல்லில் உள்ள வங்கியொன்றில் கடந்த 2003ம் ஆண்டு கார் வாங்குவதற்காக கடன் வாங்கினார்ராஜேந்திரன்.
ஆனால் தவணைப் பணத்தை அவர் முறையாக செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து 3 நாட்களுக்கு முன்புவங்கி ஊழியர்கள், ராஜேந்திரனுடைய காரைப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து வங்கிக்கு சென்ற ராஜேந்திரன், அங்கிருந்த ஊழியர்களைத் திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கிமேலாளர் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில்வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராஜேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications