தத்துவம் பேசி பலன் இல்லை! எல்.கணேசன்
சென்னை:
தத்துவம் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு பலனும் இல்லை. பேச்சைக் குறைத்துக் கொண்டு எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில்வெற்றி பெற மதிமுகவினர் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றோம், மத்திய அமைச்சர் பதவியும் வகித்துள்ளோம். ஆனாலும் இதுவரை ஒருசட்டசபைத் தேர்தலில் கூட நாம் வெற்றி கண்டதில்லை. எதிர் வரும் சட்டசபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவோம், வெற்றிபெறுவோம், சட்டசபைக்குள் நுழைவோம்.
அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பணத்தை செலவு செய்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இப்போதுஉள்ளது. எனவே தேர்தலை சந்திக்க முக்கியமாக தேவை பணம். வெறுமனே தத்துவம் பேசிக் கொண்டிருப்பதால் ஒரு பலனும்இல்லை.
தேர்தலை சந்திக்க இப்போதே மாவட்ட வாரியாக மதிமுகவினர் தயாராக வேண்டும். நிதி திரட்ட வேண்டும். இந்த நிதியைவைகோவே நேரில் வந்து பெற்றுக் கொள்வார். திமுகவை அண்ணா தான் வளர்த்தார். அதேபோல இப்போது மதிமுகவைவைகோ வளர்த்துக் கொண்டுள்ளார்.
அவருக்கு தோள் கொடுத்து மதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் முழுவீச்சில் பாடுபட வேண்டும். மற்ற தலைவர்களைப் போல நிதியைப் பூட்டி வைத்துக் கொண்டு ஒப்புக்கு எதையாவது தரமாட்டார்.
நீங்கள் கொடுக்கப் போகும் பணத்தை உங்களிடமே கொடுப்பார். எனவே சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும்வகையில் தொண்டர்கள் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். மக்கள் பணியாற்ற நாம் சட்டசபைக்கு செல்வது அவசியம்என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று பேசினார் கணேசன்.
கூட்டத்தின் போது, சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் திருவாசக வெளியீட்டு விழாவின் போது வைகோ நிகழ்த்தியஇலக்கிய முழக்கத்தின் ஒலி நாடா வெளியிடப்பட்டது. சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இதை தயாரித்துள்ளார்.
இந்த ஒலி நாடாவை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வைகோ வழங்கினார். இதுதவிர சேது சமுத்திரத் திட்டம்நிறைவேற பாடுபட்டதற்காக நெல்லையைச் சேர்ந்த அபுபக்கர் என்பவர் வைகோவை புகழ்ந்து பாடிய ஒலி நாடாவும்கூட்டத்தில் வெளியிடப்பட்டது.












Click it and Unblock the Notifications