பாகிஸ்தானில் 3 ரயில்கள் மோதல்: 300 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 300 பேர் பலியானார்கள். 1000க்கும் மேற்பட்டோர்படுகாயமடைந்துள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அப்போது அதே தண்டவாளத்தில் லாகூரில் இருந்த வந்து கொண்டிருந்த கராச்சி எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கரமாக மோதியது.இதில் இரு ரயில்களின் பெட்டிகள் தடம் புரண்டு அடுத்த தண்டவாளத்தில் விழுந்தது.
அப்போது அடுத்த தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்த ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் கவிழ்ந்து கிடந்த ரயில்பெட்டிகளின் மீது மோதியது. இதில் 3 ரயில்களிலும் இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் நசுங்கி இறந்தனர்.
1000க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இதில் பலரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பலிஎண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த பயங்கர ரயில் விபத்து குறித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். ரயில் விபத்து குறித்துவிசாரணை நடத்த அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications