சேது சமுத்திரம்: மணல் அள்ளும் பணி தீவிரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்று முதல் 7,500 கன மீட்டர் மண்ணைஅப்புறப்படுத்தும் பணி தொடங்குகிறது.

இது தொடர்பாக சென்னையில் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு கூறுகையில்,

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திட்டம் தொடங்கிய 10 நாட்களில் 2 லட்சம்கனமீட்டர் மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தினமும் ஆய்வுகள் நடத்தும் பணியில்காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. மண்ணை தோண்டும் இடம், கொட்டும் இடம் குறித்து விரிவானஆய்வுகள் நடத்தப்படுகிறது.

மண்ணை கொட்டும் இடத்திற்கு அருகாமையில் கோடிக்கரை பறவைகள் சரணாலயமும், முத்துப்பேட்டை அருகே சதுப்புநிலக்காடுகளும் உள்ளன. மண்ணை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச் சூழல் குறித்து 4 மணி நேரத்திற்கு ஒருமுறை ஆய்வுசெய்யப்படுகிறது.

கடலில் எடுக்கப்படும் தண்ணீரின் தன்மை, காலநிலை மாற்றம், உப்புத் தன்மை போன்றவை கணக்கீடு செய்யப்படுகிறது. கடல்மட்டத்தில் இரண்டு மீட்டர் ஆழம் முதல் 5 மீட்டர் ஆழம் வரையில் சோதனைகள் செய்யப்படுகின்றன.

கடந்த ஜூன் மாதம் வரையில் நடத்தப்பட்ட ஆய்வில் இப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றுதெரியவந்துள்ளது. வரும் 15ம் தேதி சேது சமுத்திர திட்டம் குறித்த கருத்தரங்கம் மதுரையில் நடக்க உள்ளது.

40 வல்லுனர்கள், மத்திய சுற்றுச்சூழல் துறையின் 3 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். அண்ணாமலைபல்கலைக்கழகம், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை பங்கேற்க உள்ளன.

இன்று முதல் சேது சமுத்திர திட்டத்திற்கு 7,500 கன மீட்டர் மண்ணை அப்புறப்படுத்தும் பெரிய கப்பல் பணியில் ஈடுபடும்.இதனால், 20 மாதத்திற்குள் இப்பணிகள் முடிவுக்கு வரும் என்றார் டி.ஆர்.பாலு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+