மைசூர்: தமிழில் பேசியவர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல்
மைசூர்:
மைசூரில் நடந்த கன்னடப் படப்பிடிப்பின் போது தமிழில் பேசியவர்கள் மீது கன்னட வெறியர்கள் தாக்குதல்நடத்தினர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே நாச்சனஹள்ளி என்ற இடத்தில் நடந்து வருகிறது. வியாழக்கிழமைபடப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிக்கஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கே வந்துஇங்கு என்ன படப்பிடிப்பு நடந்து வருகிறது என்று படப்பிடிப்புக் குழுவினரிடம் தமிழில் கேட்டுள்ளார்.
அதற்கு படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர், மை ஆட்டோகிராப் படத்தின் ஷூட்டிங் நடப்பதாகதமிழிலேயே பதிலளித்துள்ளார்.
இதைப் பார்த்த கன்னடர்கள் சிலர், கன்னடப் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தமிழில் பேசுகிறீர்களா என்றுகேட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் தலையிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திபடப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.
கன்னடப் படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்களாக பெரும்பாலும் தமிழர்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.அதே போல பெரும்பாலும் தமிழ், தெலுங்குப் படக் கதைகளைத் தான் உல்டா செய்து கன்னடத்தில் படங்கள்வந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.