For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: அதிமுக மாநிலம் தழுவிய போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து 22ம் தேதி தமிழகம் முழுவதும்அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை ஒருபோதும் கர்நாடக அரசு முறையாக அமல்படுத்தியதில்லை. ஒவ்வொருஆண்டும் கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு முறையாக தண்ணீர் திறந்து விடப்படுவதில்லை.

அணை நிரம்பினால் மட்டுமே, உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விடுகிறது கர்நாடக அரசு.

தற்போது கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. கபிணி அணை நிரம்பி வழிகிறது.இருப்பினும் உபரி நீரை மட்டுமே கர்நாடக அரசு திறந்து விட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை கர்நாடக அரசு அமல்படுத்தி, உடனடியாக தமிழகத்திற்குரிய நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகம் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக சார்பில் அமைதியானமுறையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 22ம் தேதி பகல் 12 மணியளவில் தமிழகம் முழுவதும் உள்ள மத்தியஅரசு அலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இந்தப் போராட்டத்திற்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள் தலைமை வகிப்பார்கள். கட்சியினர்அனைவரும், பொது மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X