சென்னையில் மினி பஸ்: வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
சென்னை புறநகர்ப் பகுதிகளில் மினி பஸ்களை இயக்குவதை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 2மதேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர்களில் மினி பஸ்களை இயக்கினால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.இதனால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படும் என அவர்கள் கூறினர்.
அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சங்கங்கள் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்தநீதிபதி பி.டி.தினகரன், வழக்கை டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரைசென்னை நகரில் மினி பஸ்களை இயக்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இவ்வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கியபெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மினி பஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதற்கு அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சோமையாஜுலுகோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கை வரும் ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications