சென்னையை பிரிக்க ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
சென்னையைப் பிரித்து 3 மாவட்டங்களாக்க வேண்டும். கோவை, சேலம் போன்ற பெரிய மாவட்டங்களையும் இரண்டாகப்பிரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த சேவை செய்யவும், நிர்வாக வசதியையும் அடிப்படையாகக் கொண்டு பெரிய மாவட்டங்களைப் பிரிப்பதுஎன்பது அரசின் கொள்கை முடிவாக உள்ளது. அந்த வகையில்தான் தமிழகத்தில் தற்போது 30 மாவட்டங்கள் உள்ளன.
மக்களுக்கு விரைவான சேவை செய்யவும், அரசின் வளர்ச்சிப் பணிகள் வேகமாக மக்களைச் சென்றடையவும், பெரியமாவட்டங்களைப் பிரிக்க வேண்டும். 6 சட்டசபைத் தொகுதிகளுக்கு ஒரு வருவாய் மாவட்டம் என்ற ரீதியில், தமிழகத்தின்மாவட்டங்களின் எண்ணிக்கையை 39 ஆக அதிகரிக்க வேண்டும்.
சென்னையை மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கலாம். கோவை, சேலம், விழுப்புரம் போன்ற மேலும் சில பெரியமாவட்டங்களையும் இரண்டாகப் பிரிக்கலாம். இந்த மாவட்டப் பிரிவினை மிக அவசியமானது மட்டுமல்ல,அவசரமானதாகும்.
சட்டசபைத் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் சென்னையில் 16 தொகுதிகள் இருக்கும். கோவையில் இது 14 ஆக இருக்கும்.ஆனால் நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகள் மட்டுமே இருக்கும்.
ஆனால் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் சமமாகப் பிரிக்கப்படுவதைப் போல, மாவட்டங்களில் தொகுதிகளின்எண்ணிக்கையும் சம அளவில் இருப்பதுதான் நியாயம் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications