இந்துக்கள் பற்றி விமர்சனம்: கருணாநிதிக்கு சம்மன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்துக்களை விமர்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
சென்னை வேப்பேரியில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் இந்துக்களை கருணாநிதி விமர்சித்துப் பேசியதாக கூறி, பிரேம்நாத்என்பவர் கடந்த 24.11.2002ல் சென்னை எழும்பூர் போலீஸில் புகார் செய்தார்.இப்புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்தவழக்கில் 3ம் தேதி (நாளை) கருணாநிதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இந்த சம்மனை எழும்பூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், அறிவாலயம் சென்று கொடுத்தார். அதை கருணாநிதியின் வழக்கறிஞர்பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications