புலிகளின் தமிழ் ஈழம் டிவி: தெற்காசிய ஒளிபரப்பு தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

விடுதலைப் புலிகளின் "தமிழ் ஈழம் டிவி தெற்காசிய நாடுகளில் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தியுள்ளது. இதன் தொடக்க விழாகடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.

தொடக்க விழாவில் தொலைக்காட்சியின் அமைப்பாளர் கே.வீரா கூறுகையில், விடுதலைப் புலிகள் இலங்கை அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்த உடன்பாடு மேற்கொண்டாலும், முன்பு இலங்கை ராணுவத்துடன் நடந்த போரில் ஏராளமான தடைகள் மற்றும்சோதனைகளை சந்தித்தோம்.

ஆனால் அரசு தொலைக்காட்சியால் எங்களைப் பற்றி பல தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. எனவே இது குறித்து மக்களுக்குதெளிவாக விளக்க வேண்டியுள்ளது. எனவே நாங்கள் தேசிய தமிழீழ டிவி மூலம் இவற்றை மக்களுக்கு தெரிவிப்போம்.

இந்த டிவி நிகழ்ச்சிகளை இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நேபாளம், பர்மா, வங்க தேசம் மற்றும் சீனாவின் பலபகுதிகளிலும் உள்ள மக்கள் எளிதாக கண்டுகளிக்கலாம். பிற்பகல் 1.30 மணி முதல் 3.30 மணி வரை தினமும் 2 மணி நேரம் டிவிநிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். நேரடி செய்திகளும் ஒளிபரப்பாகும் என்றார்.

தொடக்க விழாவில் விடுதலைப் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தயா மாஸ்டர், விடுதலைப் புலிகளின் மீடியா யூனிட் தலைவர்நரேஷ், வாய்ஸ் ஆப் டைகர்ஸ் செய்தி ஆசிரியர் தவபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+