For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொள்ளையர் கூடாரமாக மாறும் காவல்துறை: ஸ்டாலின் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

காவல்துறையே கொள்ளையர்களின் கூடாரமாக மாறும் வகையில் தமிழக்ததில் ஆட்சி நடந்து வருகிறது என திமுக துணைப்பொதுச் செயலாளர் ஸ்டாலின் கூறினார்.

கன்னியாகுமரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சொல்லும்படி இல்லை. எதிர்க் கட்சிகளை பொய் வழக்குப் போட்டு பழி வாங்கும்வேலையைத் தான் காவல்துறை செய்து வருகிறது. காவல்துறையே கொள்ளையர்களின் கூடாரமாக மாறும் வகையில் தான்ஆட்சியே நடந்து வருகிறது.

முதலில் ரத்து செய்த திட்டங்களை தேர்தலை முன்னிட்டு மீண்டும் அறிவிக்கிறார் ஜெயலலிதா. அதையும் புதிய திட்டம் போலஅறிவித்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார். இன்னும் நிறைய அறிவிப்புகள் வெளியாகலாம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசிகொடுப்போம் என்று கூட அறிவிப்பார்கள். எல்லாமே தேர்தல் நேரத்து அறிவிப்புகள்.

இதை நம்பி மக்கள் ஏமாந்துவிட மாட்டார்கள். திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அது அப்படியே சட்டமன்றத் தேர்தலிலும்தொடரும்.

தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கோர்ட்டுக்கே செல்லாமல் தவிர்த்து வருகிறார் ஜெயலலிதா. இதிலிருந்தே அவரதுபலவீனம் வெளிப்பட்டுவிட்டது. குற்றம் செய்யவில்லை என்றால் கோர்ட்டுக்குப் போய் அதை நிரூபிக்கலாமே.

மேம்பாலம் கட்டியதில் ஊழல் செய்தோம் என்று சொல்லி என்னையும் கருணாநிதியையும் நள்ளிரவில் கைது செய்தார்கள். 4ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் இன்று வரை அதில் குற்றப் பத்திரிக்கைக் கூட தாக்கல் செய்யவில்லை. இதிலிருந்தே அதுமுழுக்க முழுக்க பொய் வழக்கு என்பது நிரூபனமாகிவிட்டது என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X