சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு
சென்னை:
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து உபரி நீர் சென்னைக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.
கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலும் பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ளமுக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இதனால் பல ஊர்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.நதிகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆற்றங்கரையோரங்களில் வசித்து வருபவர்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணா நதியிலும் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது.
கிருஷ்ணா நதியில் அமைந்துள்ள அலமாட்டி அணைக்கு விநாடிக்கு 5 லட்சம் கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. இதையடுத்துஅணையின் பாதுகாப்பை கருதி அணையிலிருந்து 3 லட்சம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதிலிருந்து வெளியாகும் உபரி நீர் பிரகாசம் கால்வாய் மூலமாக திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் தண்ணீர் கண்டலேறுஅணைக்கு வந்து கொண்டுள்ளது. கண்டலேறு அணையும் நிரம்பியுள்ளதால், அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேறிக்கொண்டுள்ளது.
இந்தத் தண்ணீர் சென்னைக்கு விரைவில் வந்து சேரும். கண்டேலறு அணையிலிருந்து சென்னை குடிநீர் விநியோகத்திற்காகபூண்டி நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு தான் ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.