3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியாவை வென்றது இலங்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை சாம்பியனானது.

இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிஇலங்கையில் நடைபெற்றது. நேற்று இறுதிப் போட்டி நடந்தது. இதில் இலங்கையும், இந்தியாவும் மோதின.

டாஸில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்கத்தில் இருந்தே இலங்கை வீரர்கள்அதிரடியாக விளையாடினர். ஜெயசூர்யா 67 ரன்களும், ஜெயவர்த்தனே 83 ரன்களும், அர்னால்டு 64 ரன்களும் குவித்தனர்.

இவர்களின் அபார ஆட்டத்தால் இலங்கை 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில்நெஹ்ராவுக்கு மட்டுமே விக்கெட்டுகள் கிடைத்தன. அவர் நேற்று 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்ற 3 விக்கெட்டுகளுமேரன் அவுட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற 282 ரன்கள் என்ற இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேவாக்கும், கங்குலியும் களமிறங்கினர். ஷேவாக்அதிரடியாக ஆடி 22 பந்துகளில் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து கங்குலி 26 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கேப்டன் 72 ரன்களிலும், யுவராஜ் 42 ரன்களிலும், கைப் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்தியா 50 ஓவர்களில் 9விக்கெட்டுகள் இழப்பிற்கு 263 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கைகோப்பையை கைப்பற்றியது.

நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது ஜெயவர்த்தனேவுக்கு வழங்கப்பட்டது. தொடர் நாயகன் விருதும்ஜெயவர்த்தனேவுக்கே கிடைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+