சொத்து விவரம்: ஐடியலின் குடும்பத்தினரிடம் விசாரிக்க போலீஸ் முடிவு
திண்டுக்கல்:
ஐடியல் சுப்ரமணியத்தின் சொத்து விவரங்கள் குறித்து அவரது மனைவி, மகனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்துள்ளனர். மேலும் அவரது விராலிப்பட்டி ஆடம்பர பங்களாவிலும் சோதனை நடத்தப்படவுள்ளது.
சென்னை ஆதிகேசவன் பாணியில், ஏகப்பட்ட பேரிடம் வங்கிக் கடன் வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய்களைஸ்வாஹா செய்து விட்ட திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டியைச் சேர்ந்த ஐடியல் சுப்ரமணியத்தை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ள போலீஸார் சென்னையில் வைத்து தீவிர விசாரணைை நடத்தி வருகின்றனர். அவர்சேர்த்துள்ள சொத்துக்கள், எவ்வளவு பேரிடம் எவ்வளவு பணம் பெற்றார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
புதன்கிழமை மாலை முதல் நடந்து வந்த விசாரணையில் 25 பேரிடம் மோசடி செய்துள்ளதாக சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.இதையடுத்து அவரை விராலிப்பட்டிக்கு கொண்டு சென்று அங்கு வைத்து விசாரிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
விராலிப்பட்டியில் மிகப் பெரிய சொகுசு பங்களா ஐடியலுக்கு உள்ளது. இதுதவிர கொடைக்கானலிலும் அவருக்கு பங்களாக்கள்உள்ளன. அங்கும் சோதனை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
இதைத் தவிர ஐடியல் சுப்ரமணியத்தின் மனைவி லீலாவதி, மகன் பாலாஜி, மகள் அருணாவிடம் விசாரணைநடைபெறவுள்ளது. ஐடியலுக்கு எங்கெங்கு சொத்துக்கள் உள்ளன, சொத்து மதிப்பு என்ன, வங்கிகளில் போடப்பட்டுள்ள பணவிவரம், நகை போன்ற பொருட்களின் விவரம் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெறவுள்ளது.
ஐடியலின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஐடியலின் நெருங்கிய கூட்டாளிகள் விக்கி மற்றும் பவுல்ராஜ் ஆகியோரை போலீஸார்தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறார்கள். அவர்களைப் பிடித்து அப்ரூவராக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.