For Quick Alerts
For Daily Alerts
Just In
1000 ரூபாய்க்கு விற்கப்படும் ரேஷன் கார்டுகள்!
திருச்சி:
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ரேஷன் கடையில் 1000 ரூபாய்க்கு புதிய ரேஷன் கார்டுகள் விற்கப்படுவதாக புகார்எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் சமீபத்தில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டன. இதில் பலருக்கு குளறுபடியான கார்டுகள்தரப்பட்டன. பலருக்கு கார்டுகள் இன்னும் கூட கிடைக்கவில்லை.இந் நிலையில் மணப்பாறையில் உள்ள ரேஷன் கடையில் 1000 ரூபாய் பெற்றுக் கொண்டு புதிய ரேஷன் கார்டுகளை, கடைஊழியர்கள் விற்பதாக புகார் எழுந்துள்ளது.
புதிதாக வந்த சுமார் 60 கார்டுகளை, சம்பந்தப்பட்டவர்களுக்கு விநியோகிக்காமல் கடையில் வேலை பார்க்கும் இமாம் மற்றும்அம்மாசி ஆகிய ஊழியர்கள் தாங்களே வைத்துக் கொண்டுள்ளனர்.
இந்தக் கார்டுகளை 1000 ரூபாய்க்கு அவர்கள் விற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை 7 கார்டுகளைஇரு ஊழியர்களும் விற்றுள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கார்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு விற்று வரும் இரு ஊழியர்கள் மீதும்நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியர் கோவிந்தராஜிடம் பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
Story first published: Thursday, August 11, 2005, 5:30 [IST]