For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோட்டை முன் உண்ணாவிரதம்: முத்துலட்சுமி அதிரடி!

By Staff
Google Oneindia Tamil News

மேட்டூர்:

நீதிபதி சதாசிவம் கமிஷனின் அறிக்கையை வெளியிடக் கோரி சென்னையில் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப் போவதாக வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி அறிவித்துள்ளார்.

வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, வருகிற சட்டசபைத் தேர்தலில் மேட்டூர் தொகுதியில் ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்பில்போட்டியிட விரும்புவதாகவும், அப்படி போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால், சுயேச்யாைகப் போட்டியிடப்போவதாகவும் கூறினார்.

இந் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களிடம் முத்துலட்சுமி பேசுகையில், அதிரடிப்படை வீரர்களால் மலைவாழ் மக்கள்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிரடிப்படையினரின் அராஜக நடவடிக்கைகள் காரணமாக அவர்களால் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சதாசிவம் கமிட்டியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டும் இன்னும் அதுவெளியிடப்படவில்லை. 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டஆதிவாசி மழைவாழ் மக்களைத் திரட்டி புதிய அமைப்பு ஒன்றை மேட்டூரில் தொடங்கவுள்ளோம்.

சதாசிவம் கமிட்டி அறிக்கையை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதிவாசிகளைத் திரட்டி சென்னையில்தமிழக அரசின் தலைமைச் செயலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறோம்.

நான் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் மேட்டூரில் போட்டியிடுவேன். அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை. அரசியல்கட்சிகள் எனக்கு சீட் கொடுத்தால் நல்லது. அப்படி இல்லாவிட்டால் சுயேச்சையாகப் போட்டியிடுவேன். வீரப்பன் எனக்குபெரும் சக்தியாக இருந்து வழி நடத்துவார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X